News March 6, 2025

பள்ளி மாணவியை வெட்டிய சித்தப்பா

image

பேரணாம்பட்டை அடுத்த ஓங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்.இவரது தம்பி சுரேஷ்பாபு.இருவருக்கும் குடும்ப பிரச்னை உள்ளது.கடந்த 4ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. குமாரின் மகளான 14 வயது மாணவி, சுரேஷ்பாபு நிலம் வழியாக சென்றார். இதைக் கண்ட சுரேஷ்பாபு, அவரது மனைவி மேகலா ஆகியோர் மாணவியை தாக்கி கத்தியால் தலையில் வெட்டியதில், மாணவி பலத்த காயமடைந்தார். அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Similar News

News November 24, 2025

வேலூர்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து – பெண் பலி

image

வேலூர்: வல்லண்டராமம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு (நவ.23) முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி (54) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

வேலூர்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து – பெண் பலி

image

வேலூர்: வல்லண்டராமம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு (நவ.23) முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி (54) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

வேலூர்: இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில்!

image

வேலூர்: காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடப்பதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (நவ.23) மாலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்ட போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வசந்தா (52), சந்திரசேகரன் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!