News March 6, 2025

பள்ளி மாணவியை வெட்டிய சித்தப்பா

image

பேரணாம்பட்டை அடுத்த ஓங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்.இவரது தம்பி சுரேஷ்பாபு.இருவருக்கும் குடும்ப பிரச்னை உள்ளது.கடந்த 4ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. குமாரின் மகளான 14 வயது மாணவி, சுரேஷ்பாபு நிலம் வழியாக சென்றார். இதைக் கண்ட சுரேஷ்பாபு, அவரது மனைவி மேகலா ஆகியோர் மாணவியை தாக்கி கத்தியால் தலையில் வெட்டியதில், மாணவி பலத்த காயமடைந்தார். அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Similar News

News November 12, 2025

வேலூர்: INOX-இல் சூப்பர் வேலை!

image

வேலூரில் இயங்கி வரும் செல்வம் ஸ்கொயரில் உள்ள PVR-INOX சினிமாவில் Operations Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்திற்கு ஏற்றாற்போல சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவம்பர். 30ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கின் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

வேலூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

வேலூர்: ஆன்லைன் மோசடியில் 45 ஆயிரம் இழந்த சிறுவன்!

image

குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் தையல் தொழில் செய்து வருகிறார். அவரது தம்பி 13 வயது சிறுவன் அக்காவின் செல்போனை பயன்படுத்திய போது 70 ஆயிரம் டாலர் பரிசு பொருள் விழுந்துள்ளது, என வந்த மெசேஜை நம்பிய சிறுவன் அக்காவிற்கு தெரியாமல் ‘கூகுள் பே’ மூலம் 45 ஆயிரம் அனுப்பி உள்ளான். இதுகுறித்து இளம்பெண் நேற்று (நவ.11) வேலூர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!