News May 15, 2024
பள்ளி மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 23, 2025
வேலூர், வரும் 28-ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

வேலூர் மாவட்ட வெல்லம் மண்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வரும் டிசம்பர் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காட்பாடி காந்தி நகரில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
வேலூர்: கால்வாயில் தவறி விழுந்த துப்புரவு பணியாளர் பலி!

வேலூர் சேனூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் சேனூர் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த விருதம்பட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
வேலூர்: டிகிரி போதும் அரசு வேலை ரெடி

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.


