News May 15, 2024

பள்ளி மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

image

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 4, 2025

வேலூர்: மத்திய ஆயுத போலீஸில் 25,487 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் SSC GD RECRUITMENT 2025-ல் கான்ஸ்டபிள், ரைபிள்மேன் உட்பட பல்வேறு பதவிகளில் 25,487 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்ற 18 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

வேலூர்: PARTNERSHIP-ல் மோசடி செய்த பெண்!

image

வேலூர்: ரங்காபுரத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் சோ்ந்து, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பொறியாளா், பார்ட்னர்ஷிப்பில் வேலூா்-சென்னை நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அமைத்துள்ளார். ஆனால் அந்த பெண் வருமானத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், தனது பான் கார்டை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், டிஎஸ்பி பழனியிடம் புகார் மனு வழங்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் விண்ணப்ப படிவங்களை https://vellore.nic.in, www.tnpcb.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப நகலுடன், 2 நகல்கள் கலெக்டரிடம் ஜனவரி 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!