News September 27, 2024

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

image

வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ரங்கராஜ் என்பவரை விசாரணை செய்தபோது அவர் பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.500 மதிப்புள்ள 100 கிராம் அளவுள்ள 10 பொட்டலங்களை ( தலா 10 கிராம் )பறிமுதல் செய்த அரும்பாவூர் காவல்துறையினர் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News December 10, 2025

பெரம்பலூர்: மருத்துவ மதிப்பீட்டு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் (0-18) வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ மதிப்பீட்டு முகாமினை நேற்று (டிச.09) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.

News December 10, 2025

பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

News December 10, 2025

பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!