News March 28, 2025
பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள்<
Similar News
News November 20, 2025
வேலூர் கலெக்டர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு, எலி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவக்கூடிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். மேலும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மற்றும் நகர்புற அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
வேலூர்: சம்பா பருவ நெற்பயிர் காப்பீடு- அதிகாரிகள் தகவல்

வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2025 சம்பா பருவ நெற்பயிர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களை அணுகி காப்பீடு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு 544 செலுத்தி வரும் நவ 30-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 20, 2025
வேலூர்: ஆட்டை காப்பற்ற உயிரை விட்ட இளைஞர்!

வேலூர்: பேரணாம்பட்டு ஏரிகுத்திமேடு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (34). இவர் நேற்று (நவ.19) ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, ஒரு ஆடு அங்குள்ள 90 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றின் ஓரம் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடு தவறி கிணற்றில் விழுந்து விட கூடாது என்பதற்காக ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட முபாரக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


