News April 18, 2025

பள்ளி சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

image

விருதுநகரை சேர்ந்த பள்ளி சிறார்கள் இருவரை பிளக்ஸ் பேனர் அமைக்கும் பணிக்காக அழைத்து வந்த சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த சாம் டேவிட் (25) என்பவர் மாணவர்களுக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்து இருவரையும் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது ஏப்.15 அன்று போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கோவையில் பதுங்கி இருந்த சாம் டேவிட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 14, 2025

ஸ்ரீவி: தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை 

image

விருதுநகர் குமாரலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணநாராயணன். இவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார் .இவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கிருஷ்ணநாராயணனை கைது செய்தனர். இதில் நேஏறு கிருஷ்ணநாராயணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News November 14, 2025

சிவகாசி: மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்

image

வெம்பகோட்டை பகுதியில் இரிடியத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 3 மாதத்தில் ரூ.1 கோடி கிடைக்கும் என கூறி ரூ.1.38 கோடி மோசடி செய்த ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சி அ.தி.மு.க 8-வது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன், ஒன்றிய மகளிரணி செயலாளர் கந்தலீலா மற்றும் ராணிநாச்சியார் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கி EPS நடவடிக்கை எடுத்துள்ளார்.

News November 14, 2025

ஊஞ்சல் உற்சவத்தில் ஆண்டாள், ரங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நவ.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் 6- ம் நாளான நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!