News April 18, 2025

பள்ளி சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

image

விருதுநகரை சேர்ந்த பள்ளி சிறார்கள் இருவரை பிளக்ஸ் பேனர் அமைக்கும் பணிக்காக அழைத்து வந்த சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த சாம் டேவிட் (25) என்பவர் மாணவர்களுக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்து இருவரையும் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது ஏப்.15 அன்று போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கோவையில் பதுங்கி இருந்த சாம் டேவிட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 24, 2025

விருதுநகர்:புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு

image

விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் 110 ஸ்டால்களில் ஏராளமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இலக்கியவாதிகள், புத்தகப் பிரியர்கள் என பலரும் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை அள்ளிச் செல்கின்றனர்.மேலும் போட்டித்தேர்வு புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் புத்தகத்திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

News November 24, 2025

விருதுநகர்: அரசுப்பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து சேதம்

image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை தொடர்மழையால் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

News November 24, 2025

விருதுநகர் அருகே மின்வேலி அமைத்த நபர் கைது!

image

தொப்பலாக்கரையில் நேற்று விவசாய தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்ற விவசாயி உயிரிழந்தார். தோட்டத்திற்கு உரம் போடச் சென்றபோது அருகிலுள்ள தங்கப்பாண்டியன் தோட்டத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி மாரிச்சாமி பலியான நிலையில் பரளச்சி போலீசார் தங்கப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!