News December 6, 2024
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், மாணவர்கள் நலன் கருதி விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் (டிச.9) முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
விழுப்புரம்: மகளிருக்கு ரூ.10 லட்சம் கடன் – ஆட்சியர் அறிவிப்பு!

தமிழக அரசின் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்படி, மகளிர் மற்றும் திருநங்கையர்கள் தொழில் துவங்கிட, ரூ.10 லட்சம் வரை பிணையில்லா வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்தொகையில், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம், அரசு மானிய உதவி வழங்கப்படும். தொழில்முனைவோராக ஆர்வமுள்ள மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிப்பக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 4, 2025
விழுப்புரம்: மத்திய ஆயுத போலீஸில் 25,487 காலியிடங்கள்!

மத்திய அரசின் SSC GD RECRUITMENT 2025-ல் கான்ஸ்டபிள், ரைபிள்மேன் உட்பட பல்வேறு பதவிகளில் 25,487 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்ற 18 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள்<
News December 4, 2025
விழுப்புரம்: சாலை விபத்தில் விவசாயி பரிதாப பலி!

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


