News March 25, 2025
பள்ளி ஆண்டு விழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளி

ஆம்பூர், துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 22ஆம் தேதி இரவு பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது. விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி சுவிதாவின் கணவர் கணேஷ் என்பவரும் பங்கேற்றார். சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றதும், குத்து பாடலை பாடியதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 28, 2025
டிட்வா புயல்: திருப்பத்தூருக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருப்பத்தூருக்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் திருப்பத்தூரில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
திருப்பத்தூர்: பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக பாட்டிக்கு விபூதி!

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி வசந்தா (66), கட்டிட தொழிலாளி. இவரது பேரன் பிரசாந்த் (20) என்பவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக வேப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவர் 5 பவுன் நகையை வசந்தாவிடம் பெற்றுக்கொண்டு டிமிக்கி காட்டியுள்ளார். புகாரின் பேரில் பிரவீன் கைது செய்யப்பட்டார்.
News November 28, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) – இன்று (நவ.28) விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் இருப்பார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளவர்களை கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


