News April 5, 2025
பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்துள்ளார் தொடர்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து சுரண்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
தென்காசி: SIR உதவி எண்கள் வெளியீடு

SIR படிவம் பூர்த்தி செய்வது குறித்து சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் – 04633 210074, 04633-1950, தென்காசி சட்டமன்றத் தொகுதி -04633-222212, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி-04633-245666, ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி 04633-270899, 9944096957, சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி 04636223030, வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதி-04636-250223 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம்.
News November 20, 2025
தென்காசி: 2002 வாக்காளர் பட்டியல் அறிய இணையதளம் முகவரி

தமிழகம் முழுவதும் சிறப்பு விரைவு வாக்காளர் திருத்தம் நடந்து வருகிறது. 2002ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் விபரங்களை எளிய முறையில் அறிய : https://tenkasi-electors.vercel.app/ என்ற இணையதளத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க.
News November 20, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று நவ.19 இரவு தென்காசி, , புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


