News April 5, 2025

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

image

தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்துள்ளார் தொடர்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து சுரண்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 1, 2025

தென்காசி கோர விபத்து; லாரி ஓட்டுநர் கைது!

image

தென்காசி மாவட்டம், சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு, மனைவி உஷா, சுரண்டை நகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர் மற்றும் பிளஸ்சி நேற்று ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரி, பைக் மீது மோதியதில் கீழே விழுந்த மூவரும் லாரி டயரில் சிக்கி உயிரிழந்தனர். குலையநேரியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் 30, என்பவரை, சுரண்டை போலீசார் கைது செய்தனர்.

News December 1, 2025

தென்காசியில் விண்ணை தொட்ட மல்லிகை பூ விலை!

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் மல்லிகை, பிச்சி, முல்லை, கனகாம்பரம், மரிக்கொழுந்து உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் சந்தைக்கு வருகின்றன. முகூர்த்த நாள் மற்றும் கேரளாவுக்கு அதிக ஏற்றுமதி காரணமாக, மல்லிகைப் பூ விலை திடீரென உயர்ந்துள்ளது. சங்கரன்கோவிலில் நேற்று மல்லிகை கிலோ ₹7,500 வரை விற்பனையானது.

News November 30, 2025

தென்காசி : இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

தென்காசி மாவட்ட மக்களே, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.

error: Content is protected !!