News April 8, 2025
பள்ளிகொண்டாவில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம்

பள்ளிகொண்டாவில் 70ஆவது ஆண்டு மாடு விடும் விழா நேற்று (ஏப்ரல் 7) நடந்தது. இந்த விழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 250 மாடுகள் பங்கேற்றன. பின்னர் வாடிவாசலில் இருந்து மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டு இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
Similar News
News November 22, 2025
மாவட்ட அளவிலான பேச்சு போட்டி – கலெக்டர் தகவல்

வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் வரும் டிசம்பர் 2,3 தேதிகளில் அனைத்து பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து பங்கேற்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
வேலூர்: 13 சவரன் நகையை திருடிய வட மாநில பெண் கைது

காட்பாடி சேர்ந்தவர் பூவேந்தன் (66). இவர் கடந்த (செப் 26)ம் பெங்களூர் செல்வதற்காக மனைவியுடன் காட்பாடி ரயில்வே நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறும்போது பையில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் சிசிவி காட்சிகள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த துர்கா (45) என்பவரை நேற்று (நவ.21) கைது செய்தனர்.
News November 22, 2025
வேலூர்: 13 சவரன் நகையை திருடிய வட மாநில பெண் கைது

காட்பாடி சேர்ந்தவர் பூவேந்தன் (66). இவர் கடந்த (செப் 26)ம் பெங்களூர் செல்வதற்காக மனைவியுடன் காட்பாடி ரயில்வே நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறும்போது பையில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் சிசிவி காட்சிகள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த துர்கா (45) என்பவரை நேற்று (நவ.21) கைது செய்தனர்.


