News April 8, 2025

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைடைய ரவுடி கைது 

image

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் (52) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர், கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

BREAKING: தென்காசியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் இன்று (நவ.9) லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னைக்கு வெளியே போறவங்க குடை எடுக்க மறக்காதீங்க. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

தென்காசி: காவலர் தேர்வு குறித்த முக்கிய தகவல்!

image

தென்காசியில் இன்று (நவ.09) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 8 மையங்களில் நடைபெறுகிறது. மொத்த விண்ணப்பதாரர்கள் 7,911 (ஆண்கள் 5,867, பெண்கள் 2,044). தேர்வு பாதுகாப்பு பணிக்காக 924 போலீசார் நியமிக்கபட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களை சோதனை செய்து, அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கபடுவர். SHARE!

News November 8, 2025

தென்காசி: 90 வயது பாட்டிக்கு ரேடியோ கிடைத்தது

image

புளியங்குடி அருகே சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆதிலட்சுமி தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன் மர்ம நபர் இவரது ரேடியோவை திருடியதால் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் <<18188698>>மனுஅளித்தார்<<>>. இதை அறிந்த தனியார் எப்.எம் நிர்வாகம் புதிய ரேடியோ வழங்கியது. ரேடியோவை பெற்ற ஆதிலட்சுமி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

error: Content is protected !!