News August 2, 2024

பல்லாவரம் – கூடுவாஞ்சேரி ரயில் சேவை ரத்து

image

நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சென்னை – பல்லாவரம் இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப்படும். மேலே குறிப்பிட்ட நாட்களில், பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.

Similar News

News December 5, 2025

சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்?

image

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 10.40 லட்சம் பேர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 90 ஆயிரம் பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 88 ஆயிரம் பேரும், கொளத்தூர் தொகுதியில் 73 ஆயிரம் பேரும், சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் 83 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக திரு.வி.க.நகர் தொகுதியில் 32 ஆயிரம் பேரும் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

News December 5, 2025

சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

image

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.

News December 5, 2025

சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

image

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.

error: Content is protected !!