News August 14, 2024
பல்லடம் கொலை வழக்கு: மேலும் மூவர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வினோத் கண்ணன் கடந்த 8ஆம் தேதி பல்லடம் கரையான் புதூர் பகுதியில் மர்மக்கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் ஏற்கனவே 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது சுரேஷ், அஜய் தேவன் மற்றும் தங்கமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
Similar News
News December 4, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (04.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும், அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News December 4, 2025
திருப்பூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 4, 2025
திருப்பூர் அருகே சோக சம்பவம்!

திருப்பூர் இடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மனைவி பேபி. ஆறுமுகம் இடுவாய் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு வந்த இவர், சிகிச்சை பலன் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


