News August 14, 2024
பல்லடம் கொலை வழக்கு: மேலும் மூவர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வினோத் கண்ணன் கடந்த 8ஆம் தேதி பல்லடம் கரையான் புதூர் பகுதியில் மர்மக்கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் ஏற்கனவே 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது சுரேஷ், அஜய் தேவன் மற்றும் தங்கமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
Similar News
News December 3, 2025
திருப்பூர் மக்களே உஷார்: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.03), திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News December 3, 2025
காங்கேயம் அருகே சோக சம்பவம்!

காங்கேயம் அருகே நத்தக்காடையூர், மன்றாடியார்நகரை சேர்ந்தவர் பிரியா (30). கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு, 8 வயது மகள் உள்ளார். இந்நிலையில் தந்தை வீட்டில் வசித்து வந்த பிரியா, தன்னை கவனிக்க ஆள் இல்லாத விரக்தியில், மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இதில் பிரியா உயிரிழந்த நிலையில், 8 வயது மகள் ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 3, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 2.12.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும் .


