News April 12, 2025
பறவையினம் தேர்வு செய்ய அழைப்பு

சேலம் மாவட்டத்திற்கான பறவையினம் தேர்வுசெய்ய, பொதுமக்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. சேலம், ஆத்தூர் வனக்கோட்டம் மற்றும் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நமது சேலத்திற்கான பறவையை தேர்வு செய்ய, பொதுமக்களிடம் விருப்பங்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் சேலத்தின் பறவையினை தேர்வு செய்ய இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் மே-4 வெளியிடப்படும்.
Similar News
News November 16, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.16) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 16, 2025
JUST IN: சேலத்தில் இப்படி ஒரு இடமா? மறக்காம விசிட் பண்ணுங்க!

சேலம்: கோரிமேடு குரும்பப்பட்டி அருகே உள்ள காப்புக்காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நகர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, குடும்பத்துடன் அமர்ந்து பேசும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் புற்களால் வேயப்பட்ட கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.ரூ.10 நுழைவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறக்காம விசிட் பண்ணுங்க!
News November 16, 2025
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (கணினி சார்ந்த தேர்வு) தேர்வு இன்று (நவ.16) காலை, மாலை நடக்கிறது. இத்தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 2,416 பேர் 7 மையங்களில் எழுதவுள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


