News February 16, 2025
பறவைகள் கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்கலாம்

மதுரை சர்வதேச அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு 4 நாட்கள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் இன்று மாலை 4 மணிக்கு இதில் இலவசமாக பங்கேற்று பலவகை பறவைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் இலவசமாக பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
மதுரை: பிரேக் அடித்த லாரி; டூவிலரில் வந்த இளைஞர் பலி

வாடிப்பட்டி நீரேத்தானை சேர்ந்த தேசிகன்(19). கன்னியாகுமரியை சேர்ந்த சானியா(19) என்பவரை டூவீலரில் அழைத்து கொண்டு மதுரை – திண்டுக்கல் சாலையில், டூவீலரில் நேற்று சென்றார். அப்போது மேம்பாலத்தில் முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட, பின்னால் சென்று டூவீலர் அதில் மோதியது. இதில் தேசிகன் சம்பவ இடத்திலே பலியாக, சானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற கோரிய விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல கடந்த 20 நாட்களாக போலீசார் அனுமதி மறுத்த நிலையில் இன்று (டிச.22) மாவட்ட நிர்வாகம் தரிசனத்திற்கு செல்ல அனுமதித்துள்ளது. காலை 6 முதல் மாலை 6 மணி வரை கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும், வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
மதுரை: 12th முடித்தால் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

மதுரை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் <


