News February 16, 2025

பறவைகள் கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்கலாம்

image

மதுரை சர்வதேச அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு 4 நாட்கள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் இன்று மாலை 4 மணிக்கு இதில் இலவசமாக பங்கேற்று பலவகை பறவைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் இலவசமாக பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 6, 2025

மதுரை: பள்ளி மாணவி சுருண்டு விழுந்து பலி

image

மதுரை அருகே செக்கானூரணியை சேர்ந்தவர் ஆஷிகா(14). இவர் செக்கானூரணி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 6, 2025

மதுரை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

News November 6, 2025

மதுரை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

image

ஒத்தக்கடை இ.பி.காலனியை சேர்ந்தவர் போஸ் மகன் மணிகண்டன்(19). இவர் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து கொண்டே மாலையில் மாட்டுத்தாவணி ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் இன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோ.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!