News February 16, 2025
பறவைகள் கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்கலாம்

மதுரை சர்வதேச அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு 4 நாட்கள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் இன்று மாலை 4 மணிக்கு இதில் இலவசமாக பங்கேற்று பலவகை பறவைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் இலவசமாக பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
மதுரை: சாணி பவுடர் குடித்து துடிதுடித்து பலி

திருவாதவூர் அருகே சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருகன்(48). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மதுரையில் உள்ள அப்பளம் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மனைவி வேலைக்கு சென்றதும் முருகன் நேற்று முன்தினம் சாணி பவுடரை குடித்து மயங்கி விழ, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க, அங்கு அவர் பலியானார்; காரணம் குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 27, 2025
மதுரையில் 70 பேருக்கு மறுவாழ்வு

மதுரை அரசு மருத்துவமனையில், கடந்த 11மாதங்களில் மூளைச்சாவு அடைந்த (மோகன் குமார், வினோத், பெருமாள், கோச்சடை முத்தையா, சபரீஷ், ஆனந்த போதிகுமரன், முனியாண்டி, ஹரிதேவி, ஈஸ்வரன், முருகேஸ்வரி, தேவமனோகரி மற்றும் சேகர்) ஆகிய 12 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறுநீரகம் 22 பேர், கல்லீரல் 10 பேர், இதயம் & நுரையீரல் தலா 2 பேர் என மொத்தம் 70க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
News December 26, 2025
மதுரை: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <


