News March 28, 2024

பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.6.16 லட்சம் விடுவிப்பு

image

தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 6, 2025

தஞ்சை மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டிற்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்க 544 பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 407 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 137 விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சித்ரா கூறியுள்ளார்.

News December 6, 2025

தஞ்சை: தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பெண்

image

சேவப்பநாயக்கள்வாரியை சேர்ந்தவர் மகாலட்சுமி (26). இவர் நேற்று மாலை தஞ்சை சீனிவாசபுரம் அருகே சீதாநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு தற்கொலையா? அல்லது அடிபட்டு இறந்தாரா ? என்று விசாரித்து வருகின்றனர்.

News December 6, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று (டிச.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!