News March 21, 2024

பறக்கும் படை சோதனையில் ஒரு லட்சம் பறிமுதல்

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்.21) கண்டமனூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். இதில் அவ்வழியே வந்த சதீஷ்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News October 19, 2025

தேனியில் 1 ரூபாய்க்கு சிம் கார்டு.!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள BSNL அலுவலகத்தில் 1 ரூபாய்க்கு 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உடன் கூடிய இலவச சிம் கார்டை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை 15.11.2025 வரை மட்டுமே செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

News October 19, 2025

BREAKING: தேனியில் தீபாவளியன்றும் கனமழை

image

மன்னார் வளைகுடா மற்றும் அதைன ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக தேனியில் நாளை (அக்.20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 19, 2025

தேனி: தீபாவளி நேரத்தில் பிரச்சனையா? – ஆட்சியர் அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகை நாளைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள இனிப்பு தயாரிப்பு கடைகளில் இனிப்புகளை தரமாகவும், சுத்தமாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஏதேனும் புகார் இருந்தால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!