News March 26, 2025
பர்கூர்:சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி,தேங்காய், கிரானைட் கற்கள் கொண்ட நகரமாகவும் ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும் வருவாய் ஈட்டி வரும்தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வரும் பர்கூர் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதால் சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக நகராட்சித்துறை அமைச்சா் அமைச்சர் நேற்று முன்தினம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
கிருஷ்ணகிரி 108-ல் பணிபுரிய நேர்முகத் தேர்வு

கிருஷ்ணகிரி பழைய அரசு மருத்துவமனையில் வரும் ஏப்.05 அன்று 10AM- 2PM வரை 108 ஆம்புலன் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. 10 வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற 24-35 வயதுடையோர் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 8925941030, 8925940935 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். *10 வகுப்பு தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு பகிரவும்*
News April 2, 2025
பிரபலமான காளை உயிரிழப்பு: ரசிகர்கள் சோகம்

வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக் கொம்பு காளை உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. எருது விடும் விழாக்களில், இந்த காளை பல பரிசுகளை வென்றுள்ளது. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு இதன் ஆட்டம் வியப்பாக இருக்கும். ஒரு போட்டியில் ஒரு கொம்பை இழந்தாலும், இன்னொரு கொம்புடன் களத்துக்கு வந்து சீறிபாய்ந்ததை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. இதன் மறைவால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
News April 2, 2025
அதிரடி நடவடிக்கை பாயும்: கிருஷ்ணகிரி கலெக்டர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் கடந்த பிப்.7 முதல் மார்ச் 27 வரை கனிம வள கடத்தல் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், விதிமீறிய 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 இடங்களில் அனுமதியின்றி கருப்பு கிரானைட் எடுப்பது கண்டறியப்பட்டது. மேலும், அனுமதியின்றி இயங்கிய 2 கிரஷர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதிரடி நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்துள்ளார்.