News January 23, 2025
பர்கூரில் லஞ்சம் பெற்ற இருவர் கைது

கிருஷ்ணகிரி மலையாண்டஹள்ளி புதூர் கிராமத்தில் நாகராஜ் என்பவரது நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க பர்கூர் தாலுக்கா சார்பு நில அளவை ஆய்வாளர் குமரன் இடைத்தரகர் சுஹேல் மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். நாகராஜ் ரூ.9,000 லஞ்சம் இடைத்தரகரிடம் கொடுத்துள்ளார். ஆய்வாளர் குமரன் இடம் பணத்தை சுஹேல கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் குமரன் மற்றும் இடைத்தரகர் இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News December 5, 2025
ஓசூர்: கண் இமைக்கும் நேரத்தில் திருட்டு.. ஒருவர் கைது

ஓசூர் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள டைட்டான் வாட்ச் ஷோரூம் இன் தங்கத்தால் ஆன வாட்ச் ஒன்று திருட்டுப் போனதாக தகவல் தெரிந்த நிலையில் அக்கடையில் உள்ள கேமராவில் காவலர்கள் சோதனை செய்தபோது சூடுகொண்டபள்ளியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் திருடி சென்றது தெரிந்து அவரை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரித்ததில் திருடியது உறுதி செய்து அவரிடமிருந்து வாட்ச்சை கைப்பற்றி ஷோரூமில் ஒப்படைத்தனர்.
News December 5, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


