News January 23, 2025

பர்கூரில் லஞ்சம் பெற்ற இருவர் கைது

image

கிருஷ்ணகிரி மலையாண்டஹள்ளி புதூர் கிராமத்தில் நாகராஜ் என்பவரது நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க பர்கூர் தாலுக்கா சார்பு நில அளவை ஆய்வாளர் குமரன் இடைத்தரகர் சுஹேல் மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். நாகராஜ் ரூ.9,000 லஞ்சம் இடைத்தரகரிடம் கொடுத்துள்ளார். ஆய்வாளர் குமரன் இடம் பணத்தை சுஹேல கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் குமரன் மற்றும் இடைத்தரகர் இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News October 22, 2025

கிருஷ்ணகிரி: பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் கைது

image

கிருஷ்ணகிரி: திருப்பத்துாரிலிருந்து பர்கூர் செல்லும் ‘பி6’ டவுன் பஸ் நேற்று (அக்.21) பர்கூர் நோக்கி வந்தது. பேருந்து பர்கூர் வந்ததும், அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது மதுபோதையில் இருந்த அபிஷேக், யஷ்வந்த் ஆகிய இளைஞர்கள் இறங்க மறுத்து நடத்துனரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடத்துனர் அளித்த புகாரின் பெயரில் போதை ஆசாமிகள் 2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

News October 22, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசால் பாா்வைக் குறைபாடுடைய மாணவா்களுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள கணினி ஆபரேட்டா் மற்றும் புரோகிராமிங் உதவியாளா் பயிற்சிக்கு சோ்க்கை நடைபெற உள்ளது. இதில், 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (21.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!