News August 9, 2024
பர்கூரில் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசுப் பொறியியல் கல்லூரியில் தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு இன்று வங்கி டெபிட் கார்டுகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்நிகழ்வின்போது பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் சரயு, ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.
Similar News
News September 18, 2025
கிருஷ்ணகிரி கிராம மக்களுக்கு உதவிய இயக்குனர் பா.ரஞ்சித்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி கிராமத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது தண்டகாரண்யம் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பழங்குடி மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் 8 கி.மீ. தார் சாலை அமைத்து கொடுத்தார். சாலை வசதி இல்லாததால் அவதிப்பட்டு வந்த மக்கள், ரஞ்சித்தின் இந்த செயலை பெரிதும் பாராட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
News September 18, 2025
கிருஷ்ணகிரி: வர போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

கிருஷ்ணகிரி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!
News September 18, 2025
ஓசூர் அருகே நாட்டு வெடி விபத்தில் சிக்கிய 4 பேர்

ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (40) தனது மாட்டுக்கொட்டகையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது தீப்பொறி பறந்து நாட்டு வெடிகுண்டுகள் மீது விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பெரியசாமி, அவரது மனைவி புஷ்பா (36), மகன் சரண் (13), உறவினர் ஹரிஷ் (30) என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறது