News March 29, 2025

பரோடா வங்கியில் 146 காலிப் பணியிடங்கள்

image

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் <>ஆன்லைனில் <<>>விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 10, 2025

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் பற்றிய விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதல் கலெக்டராக டி.எஸ் ராமச்சந்திரன் இருந்தார். அவரை சேர்த்து தற்போது வரை 62 கலெக்டர்கள் பதவி வகித்துள்ளனர். இதில், 6 பெண்கள், 56 ஆண்கள். 10 வது கலெக்டர் எஸ்.பி.ஸ்ரீநிவாசன், 20 வது நடராஜன், 30வது ராமச்சந்திரன், 40வது ராம்மோகன்ராவ், 50வது சுதர்சன், தற்போது, 62 வதாக கலைச்செல்வி மோகன் உள்ளார். உங்களுக்கு பிடித்த கலெக்டர் யார்? *புது தகவல்னா நண்பர்களுக்கும் பகிருங்கள்

News April 10, 2025

காஞ்சி மாவட்டத்தில் 74 பணியிடங்கள் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 74 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> ஏப்.26-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

News April 10, 2025

மாநகராட்சியில் வேலை: நாளை கடைசி நாள்

image

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க

error: Content is protected !!