News March 5, 2025

பருத்தி உற்பத்தியில் தேனி மாவட்டத்தின் பெருமை

image

தேனி, தென்னிந்தியாவின் 2வது மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், பருத்தி வர்த்தகம், தொழில்துறையின் வளர்ச்சியே ஆகும். தேனியில் மிகவும் மென்மையான, சிறந்த தரமான பருத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேனியின் பருத்திகள் கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் பருத்தி பொருட்களுக்கு போட்டியாக இருக்கும்.*உங்கள் ஊரின் பெருமையை பிறக்கும் ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 9, 2025

தேனி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

image

தேனி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News December 9, 2025

தேனி: கஞ்சா கடத்திய பெண் கைது

image

மதுரை மாவட்டம் ஆரப்பாளத்தை சேர்ந்த மாயி மகன் தங்கப்பாண்டி (32). மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி இந்துமதி (39). இவர்கள் இருவரும் தேனி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்த முயன்றுள்ளனர். இருவரிடமிருந்தும் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தேனி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

News December 9, 2025

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கிருதுமால்நதி பகுதிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கிருதுமால் நதி பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 4 மணியிலிருந்து நிறுத்தப்பட்டது. தற்போது அணையில் இருந்து இரண்டாம் போக பாசனம் மற்றும் குடிநீருக்காக என 769 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

error: Content is protected !!