News April 25, 2024

பராமரிப்பு பணிகளுக்காக நவீன இயந்திரங்கள்

image

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.100.07 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்ட பராமரிப்பு பணிகளுக்காக 15 வது மத்திய நிதி குழு மானியம் 2023 – 24 திட்டத்தின் கீழ் ₹96.60 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஜெட்டிங் மெஷின், இரு டி – சில்ட்டிங் மெஷின்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 21, 2025

கோவை: பவானி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் குமார்(25). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று தனது நண்பர்களுடன், கோவை மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர், மது போதையில் அருகில் உள்ள சிவன் கோவில் பவானி ஆற்றில் குளித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், அவரால் நீந்தி கரைக்கு வர முடியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 21, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (20.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2025

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

image

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சாமிநாதன் கயல்விழி, பவன்குமார் க.கிரியப்பனவர் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூலி உயர்வு பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

error: Content is protected !!