News August 27, 2024
பரமக்குடி பூ மாரியம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லட்சுமண குடியிருப்பு கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு பூத்தட்டு திருவிழாவை முன்னிட்டு இன்று(ஆக.,27) அதிகாலை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ தட்டுகளை தலையில் சுமந்து, கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். அதன் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Similar News
News September 19, 2025
இராமநாதபுரம் தபால் சேவை குறைதீர் கூட்டம்

இராமநாதபுரத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகின்ற செப்.20ம் தேதி தபால் சேவை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. தபால் அனுப்பியதில் குறைப்பாடுகள் இருந்தாலும், இதற்கு முன்பாக நடைபெற்ற முகாமில் மனு கொடுத்திருந்து தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், உங்களது வேறு குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியுள்ளார்.
News September 19, 2025
இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் அபதாரத்துடன் விடுதலை

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை.02 அன்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களுக்கு தலா 50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தும் வரை மீன்வர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
News September 19, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.