News August 6, 2024
பரந்தூர் விமான நிலையம் அமைய முழு காரணம் மாநில அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றியுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைந்து 5000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்கவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்தது. இதையடுத்து ஏகனாபுரம் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதுடன், மத்திய விமான அமைச்சகத்திற்கு மறுபரிசீலனை செய்ய கோரி கடிதம் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், விமான நிலைய அமைப்பதற்கும் முழு காரணம் மாநில அரசு என பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Similar News
News October 16, 2025
காஞ்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
News October 16, 2025
காஞ்சி: 8th, 10th, +2, டிகிரி படித்தவரா நீங்கள்? DON’T MISS

காஞ்சி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் அக்.24-ல் காஞ்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. இதில் 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் 8th, SSLC, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கும். ஷேர் பண்ணுங்க.
News October 16, 2025
காஞ்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தினல் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் அக்.24 ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!