News March 28, 2025

பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை நீட்டிக்க மனு

image

பரந்துாரில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளதால், சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை பூந்தமல்லியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க கோரி, வழக்கறிஞர் பெர்ரி முதல்வருக்கு நேற்று (மார்.27) மனு அனுப்பினார்.

Similar News

News December 1, 2025

காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நள்ளிரவில் வலுவிழந்தது. இந்நிலையில் வலுவிழந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மதியம் வக்கீல் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி செல்லும் குழைந்தைகள் குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள்.

News December 1, 2025

காஞ்சிபுரம்: காணாமல் போன சிறுமிகள் போராடி மீட்பு!

image

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அரசு குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளில் 4 பேர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்கள். புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் சென்னையில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

News December 1, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!