News February 1, 2025
பயனாளிகளுக்கு சிட்டா நகல்கள் வழங்கிய அமைச்சர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டம் ஆக்கூர் ஊராட்சியில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர். தொடர்ந்து வருவாய் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு சிட்டா நகல்களை வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எஸ்.பி ஸ்டாலின் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
Similar News
News April 21, 2025
கர்ப்பிணியை தாக்கிய கணவர் கைது

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி – ஜெயலட்சுமி தம்பதியினர். ஜெயலட்சுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கிருஷ்ணமூர்த்தி மது அருந்திவிட்டு பிரச்சனை செய்ததால் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் ஜெயலட்சுமியிடம் சமாதானம் பேசி வரச்சொல்லியபொழுது கிருஷ்ணமூர்த்தி தாக்கியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது.
News April 20, 2025
மயிலாடுதுறை: கோடை விடுமுறை கால சிறப்பு ரயில்

தாம்பரம்-திருச்சி இடையே இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில் மேல்மருவத்தூர், திண்டிவனம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுகிறது. முன்னதாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட இந்த ரயில் தற்போது பயணிகளின் வசதிக்காக வருகிற ஏப்.29 முதல் ஜூன்.29 வரை திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயங்கும். அடிக்கடி சென்னை செல்லும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 20, 2025
மயிலாடுதுறையில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 42 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள்<