News August 15, 2024

‘பயத்தை விதைக்கும் நேரம் வந்துவிட்டது’

image

சுதந்திர தின உரையில் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலையை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், நாடே கோபத்தில் கொந்தளித்து கொண்டிருப்பதை அறிவேன். உங்களின் கோபத்தை என்னால் உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பயத்தை விதைக்கும் நேரம் இது. பெண்களை சீண்டினால் தூக்கில் தொங்க வேண்டும் என கயவர்களுக்கு தெரிய வேண்டும் என காட்டமாக கூறினார்.

Similar News

News September 19, 2025

13 பந்துகளில் அரைசதம்.. அதிரடி காட்டிய வீரர்

image

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனையை நமீபியா வீரர் ஜேன் ஃபிரைலிங்க் படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20-ல், வெறும் 13 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விரட்டி 77 ரன்கள் எடுத்தார். நமீபியா 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்த நிலையில், சேஸ் செய்த ஜிம்பாப்வே 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

News September 19, 2025

இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

image

ஈரான் மீதான பொருளாதாரத் தடையில், அந்நாட்டின் சாபஹார் துறைமுகத்துக்கு அளித்துவந்த விலக்கை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியாக மாறும். ஐரோப்பா, ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளுடன் வணிகத் தொடர்புக்காக சாபஹார் துறைமுகத்தை பெரும் பொருள் செலவில் இந்தியா மேம்படுத்தியது. அமெரிக்காவின் தடையால், இவ்வழியாக இந்தியாவின் வணிகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

News September 19, 2025

ரோபோ சங்கர் மறைவு வேதனையளிக்கிறது: தமிழிசை

image

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ஜொலித்த நடிகர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழிசை, திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!