News February 17, 2025
பயணிகளுக்கு திருச்சி ரயில்வே அறிவுரை

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அலுவலகம் பொதுமக்களின் நலன் கருதி சமீபத்தில் டெல்லியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி விபத்து மற்றும் பல்வேறு பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி இன்று (பிப்.17) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில் பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதும், ஓடும் ரயிலில் இறங்குவதும் ஏறுவதும் கூடாது எனவும் விலை மதிக்க முடியாத உயிரை இழக்க வேண்டாம் என அறிவித்துள்ளது.
Similar News
News November 15, 2025
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே… வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 15, 2025
திருச்சி: 21 லட்சம் படிவங்கள் விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (நவ.14) மாலை வரை 21,09,778 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு முன் நிரப்பப்பட்ட படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு, படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து பெறும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
திருச்சி: நகைகளை திருடிய ஓட்டுனர்

திருச்சி, கீழ வாளாடியைச் சேர்ந்த சிந்துஜா என்பவரது வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன். இந்நிலையில் சிந்துஜா தனது வீட்டில் தங்க நகை காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அவர் லால்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்தபோது ஓட்டுநர் பிரபாகரன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பிரபாகரனை கைது செய்து நகைகளை மீட்டனர்.


