News May 16, 2024
பனைமரத்தின் மீது கார் மோதி விபத்து

பாலக்கோடு அருகே வெள்ளி சந்தை- மாரண்டஅள்ளி செல்லும் சாலையில் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதியது. இதில் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். அவரது நண்பர் கணேஷ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 14, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல் நிலைய வாரியாக இரவு ரவுண்ட்ஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட இரவு ரவுண்ட்ஸ் அதிகாரியாக ஹரூர் துணை பிரிவு காவல் கண்காணிப்பாளர் எஸ்.கரிகல் பாரி சங்கர், டி.எஸ்.பி. பொறுப்பேற்றுள்ளார். அதிகாரிகளின் கைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
News September 13, 2025
தர்மபுரி: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 13, 2025
தருமபுரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தருமபுரி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!