News September 14, 2024
பந்த் போராட்டம் தேவையற்றது: அமைச்சர் பேட்டி

புதுவை சட்டப்பேரவையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் லட்சுமி நாராயணன், கடந்த 2009ஆம் ஆண்டு மின் துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் படியே, ஆண்டுதோறும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது. புதுவை அரசு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே மின்சார மானியம் அறிவித்துள்ளது. எனவே, அரசியல் காழ்ப்புணா்ச்சியால் இந்தியா கூட்டணியினர் போராட்டத்தை அறிவித்திருப்பது தேவையற்றது என்று தெரிவித்தார்.
Similar News
News November 9, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வீட்டிலிருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம், பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் App மூலம் உடனடி கடன், குறைந்த வட்டியில் loan தருவதாக கூறி உங்கள் புகை படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
News November 8, 2025
புதுச்சேரி: ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 8, 2025
புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் வேலை நிறுத்தம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் 90கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை பளு அதிகமா இருப்பதாகவும், போதிய ஊதியம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


