News September 28, 2024

பந்தலூர் மக்கள் போராட்டம் நடத்த முடிவு

image

பந்தலூர் அருகே சோலாடி பகுதியில், 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் 4 கி.மீ., தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி நடைபெறும் தருவாயில் வருவாய் துறை அதிகாரிகள் செக்சன்-17 என்று பணியை தடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கட்டுமான பணி தொடரவேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Similar News

News November 24, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது 2026 பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். விருது பெறுபவர்களுக்கு தகுதி சான்றிதழ் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. https://awards.tn.gov.in என்ற இணையதள வாயிலாக தகுந்த சான்றிதழ்களுடன் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது 2026 பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். விருது பெறுபவர்களுக்கு தகுதி சான்றிதழ் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. https://awards.tn.gov.in என்ற இணையதள வாயிலாக தகுந்த சான்றிதழ்களுடன் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்

image

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு அஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீ ரங்கன்(65) என்பவர் இன்று காலை 3 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே வந்த போது அங்கிருந்த புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டெருமை அவரை முட்டி தாக்கியது. இதனால் காயமடைந்த அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!