News September 28, 2024

பந்தலூர் மக்கள் போராட்டம் நடத்த முடிவு

image

பந்தலூர் அருகே சோலாடி பகுதியில், 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் 4 கி.மீ., தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி நடைபெறும் தருவாயில் வருவாய் துறை அதிகாரிகள் செக்சன்-17 என்று பணியை தடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கட்டுமான பணி தொடரவேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Similar News

News November 28, 2025

நீலகிரியில் அரசு பஸ் – லாரி மோதி விபத்து!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர்– மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை நேற்று பர்லியார் அருகே கூடலூரில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து மேலே வரும் வாகனத்திற்கு இடம் கொடுக்க நிறுத்தி உள்ளார். அப்போது, பேருந்தின் பின்னால் வந்த சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் எந்த ஒரு காயமும் இன்று உயிர் தப்பினர்.

News November 28, 2025

நீலகிரி: இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

image

நீலகிரி: மின் பராமரிப்பு பணி காரணமாக வரும் டிச.1-ம் தேதி ஓரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு. சின்னகுன்னூர், அணிக் கொரை, டி.மணியட்டி, பில்லிக்கம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. SHARE IT

News November 28, 2025

மாவனல்லா பகுதியில் 2 மாடுகளை தாக்கிய புலி

image

கூடலூர் மாவனல்லா பகுதியில் உள்ள கோசாலையில் நேற்று முந்தினம் புகுந்த புலி, 2 மாடுகளை தாக்கியுள்ளது. இதில் மாடுகளின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கோசாலையில் வயதான மற்றும் ஊனமுற்ற மாடுகள் நூற்றுக்கும் அதிகமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாடுகளை தாக்கி கடித்த புலி மூதாட்டியை தாக்கிய புலியாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

error: Content is protected !!