News March 5, 2025
பத்மநாபபுரம் மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

பத்மநாபப்புரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் குறை தீர்க்கும் முகாம் சப் கலெக்டர் தலைமையில் 18. ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.* நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News July 8, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.8) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை 42.30 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை 71.25 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 13.35 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 13.45 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 471 கனஅடி, பெருஞ்சாணிக்கு 129 கன அடி நீர்வரத்தும் உள்ளது.
News July 8, 2025
குமரியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News July 7, 2025
சாமிதோப்பில் கொலை செய்யப்பட்டவர் குறித்து தகவல் தெரிவிக்கவும்

தென்தாமரை குளம் அருகே சாமி தோப்பில் கடந்த 5ம் தேதி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது இதுவரையிலும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து தென்தாமரைகுளம் போலீசார் இறந்து போனவர் படத்தை வெளியிட்டு தகவல் தெரிவிக்க கூறி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சமூக வலைதளங்கள் மூலமாகவும் சுவரொட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க