News October 23, 2024

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு

image

இரும்புலிகுறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் லஞ்ச ஒழிப்பு ஏ டி எஸ் பி ராமச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சிறப்பு காவல் துணை ஆய்வாளர்கள் ரவி பவுன்ராஜ் உள்ளிட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத  5000 ரூபாயை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 22, 2025

அரியலூர் மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) அவ்வப்போது மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

அரியலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

அரியலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே <<>>கிளிக் செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இம்மைங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் வாக்கு செலுத்தும் மையங்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!