News March 28, 2025

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 332 பேர் ஆப்சென்ட்

image

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் இன்று நடந்த 10ம் வகுப்பு பொது தேர்வில் 17,807 பேர் தேர்வு எழுதினர். 332 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் 14 சிறப்பு மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 276 தனி தேர்வாளர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதில் 28 பேர் தேர்வு எழுதவில்லை என வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 20, 2025

காட்பாடி: நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் திருட்டு!

image

காட்பாடி பிரம்மபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரா (58). இவர் நேற்று முன்தினம் வள்ளிமலை செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இந்திரா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழுத்தில் இருந்து பறித்து சென்றனர். இதுகுறித்து இந்திரா காட்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

வேலூர்: தேங்காய் வியாபாரி மயங்கி விழுந்து பலி!

image

ஒடுகத்தூரை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (50). இவர் தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பள்ளிகொண்டா சின்னகருங்காலியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாய கிருஷ்ணனை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

வேலூர்: தேங்காய் வியாபாரி மயங்கி விழுந்து பலி!

image

ஒடுகத்தூரை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (50). இவர் தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பள்ளிகொண்டா சின்னகருங்காலியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாய கிருஷ்ணனை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!