News December 6, 2024
பதுவையில் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம்

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Similar News
News October 31, 2025
புதுச்சேரி: வாலிபருக்கு சரமாரி வெட்டு

புதுச்சேரி நாவர்குலம் களைவாணர் நகர் பகுதியில் வாலிபர் மீது ஒரு கும்பல் சரமாரி தாக்குதல், தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் மிகவும் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை வெறி தாக்குதலுக்கான காரணத்தை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
News October 30, 2025
புதுச்சேரி: மின் தடை அறிவிப்பு

புதுச்சேரி, நாளை (31.10.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெடுங்காடு மின் பிரிவிற்குட்பட்ட உயர் மின் அழுத்த பாதையில், சில பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செருமாவிலங்கை பத்தக்குடி, தேவமாபுரம், காமராஜர் சாலை, கீழபருத்திகுடி, அம்பேத்கார் நகர் வரை உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்துறை உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
புதுச்சேரி: உதவி எண்கள் அறிவிப்பு!

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வில்லியனூர் சார்பாக உதவி எண்கள் அறிவித்தனர், அவை குழந்தைகள் பாதுகாப்பு சேவை 1098, பெண்கள் பாதுகாப்பு 1091, மகளிர் குற்ற தடுப்பு உதவி மையம் 181, இயற்கை பேரிடர் மீட்பு சேவை 1096, சைபர் குற்றங்களுக்கு புகார் எண் 1930, சமூக நலத்துறை உதவி எண் 04132244964 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


