News March 27, 2024
பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்து அந்தந்த வாக்குச்சாவடி மையத்தினை இன்று திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாரு ஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருவாரூர் நகராட்சி துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட கண்காணிப்பாளர் – 9498110066, ▶துணை கண்காணிப்பாளர், திருவாரூர் – 9498100866, ▶துணை கண்காணிப்பாளர், நன்னிலம் – 9498100874, ▶துணை கண்காணிப்பாளர், மன்னார்குடி- 9498100881, ▶துணை கண்காணிப்பாளர், திருத்துறைபூண்டி- 9498100891, ▶துணை கண்காணிப்பாளர், முத்துபேட்டை – 9498100897. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
News April 20, 2025
கடன் பிரச்சனையை தீர்க்கும் பைரவர் கோயில்

நாகை, வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் வேதாரண்யத்திற்கு மேற்கே தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு மூலவராக பைரவர் காட்சி தருகிறார். இக்கோயிலில் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் கடன்பிரச்சனை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 20, 2025
திருவாரூர் அமையும் பவர் பிளாண்ட்

தமிழகத்தில் முதல் முறையாக திருவாரூர் மற்றும் கரூரில் தலா 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை பேட்டரி வசதியுடன் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பொது – தனியார் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையங்கள் 9,151 மெகாவாட் திறனில் அமைக்கப்பட உள்ளன.