News December 6, 2024
பண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் வலை

பேரையூர் அருகே சாப்டூர் வி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(39). இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால் பல லட்சம் ரூபாய் வெளிநாட்டு டிரஸ்ட் மூலமாக பெற்றுத் தருவோம் என பாலாஜி, மணிராஜா, செல்வம் ஆகியோர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ரூ. 11 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின் 3 நபர்களும் தலைமறைவாகி விட்டனர். புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
மதுரை: இன்றும் நாளையும் மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கணக்கீட்டு படிவங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டுள்ளன. இதனை பூர்த்தி செய்து வழங்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் உதவி மையம் செயல்பட உள்ளது. கணக்கீட்டு படிவம் கிடைக்காதவர்கள் இம்மையத்தில் பெறலாம்.சந்தேகங்களுக்கு 1950 உதவி எண்ணை அழைக்கலாம். தெரியாதவர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 21, 2025
மதுரை: கோழிகளை விழுங்கிய பாம்பு..!

கொட்டாம்பட்டி அருகே பட்டமங்கலப்பட்டி கிராமத்தில், ஆண்டிச்சாமி என்ற விவசாயின் வீட்டின் அருகே குடியிருப்பு பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு வந்து கோழிகளை நேற்று விழுங்க தொடங்கியது. தகவல் அறிந்த கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சென்ற ரஞ்சித்குமார், கண்ணன், தங்கப்பாண்டி, விஜயராஜ் அடங்கிய தீயணைப்பு வீரர்கள் அப்பாம்பை பிடித்து, வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
News November 21, 2025
மதுரை: ரூ.1,23,100 ஊதியத்தில் வேலை., தேர்வு இல்லை!

மதுரை மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <


