News December 6, 2024
பண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் வலை

பேரையூர் அருகே சாப்டூர் வி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(39). இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால் பல லட்சம் ரூபாய் வெளிநாட்டு டிரஸ்ட் மூலமாக பெற்றுத் தருவோம் என பாலாஜி, மணிராஜா, செல்வம் ஆகியோர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ரூ. 11 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின் 3 நபர்களும் தலைமறைவாகி விட்டனர். புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றி பார்க்கலாம்

உலக மரபு வார விழா ஆண்டுதோறும் நவ.19 முதல் 25 வரை ஒரு வார காலம் கொண்டாடப்படும். இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னமான மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனையை மேற்கண்ட ஒரு வாரத்திற்கு கட்டணமில்லாமல் சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


