News April 4, 2025

பண்ருட்டி பலாப்பழம், முந்திரிக்கு புவிசார் குறியீடு

image

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பண்ருட்டி பகுதியில் உள்ள மண்வளம், தட்பவெப்ப நிலை ஆகிய காரணங்களால் பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கென தனி சுவை உண்டு. இத்துடன் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையை உங்க நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்!

Similar News

News September 18, 2025

கடலூர்: ஆற்றில் மூழ்கி பரிதாப பலி !

image

கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 78). இவர் நேற்று சாவடி கெடிலம் ஆறு அணைக்கட்டு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது. சவுந்தரராஜன் கால் தவறி ஆற்றில் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News September 18, 2025

கடலூர் மக்களே இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!

image

கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப்.18) நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூர் அடுத்த போத்திரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருநாரையூர் பகுதியில் உள்ள சைக்ளோன் ஷெல்டர், பரங்கிப்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட சிவம் மஹால் மற்றும் விருத்தாசலம் திருமலை திருச்சானூர் மண்டபம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடக்கிறது.

News September 18, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!