News April 8, 2025

பண்ருட்டி அருகே பதுக்கப்பட்ட ரேசன் பொருட்கள் பறிமுதல்

image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை முறைகேடாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் பண்ருட்டியில் உள்ள ஒரு வீட்டில் 1,200 கிலோ அரிசி, 170 கிலோ துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 5, 2025

கடலூர்: 12 வயது சிறுமி கர்ப்பம்; இளைஞர் கைது

image

சேத்தியாத்தோப்பு அருகே 12 வயது சிறுமி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே சூளையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் (26) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் அவர் கருவுற்றார். இதையடுத்து மருத்துவனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News December 5, 2025

கடலூர்: தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி

image

மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கந்தவேல் மகள் சுருதி (19). வேலூரில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது தாய் தீபாவுடன் சுருதி உறங்கியுள்ளார். இதையடுத்து அதிகாலை அவரது தாய் எழுந்து பார்த்தபோது சுருதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைக்கண்டு கதறிய அவரது தாய் அளித்த புகாரின் பேரில், புதுநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 5, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.4) இரவு 10 மணி முதல் இன்று(டிச.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!