News April 11, 2025
பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் சிஎஸ்ஐ துவக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி பணியிடை மரணம் அடைந்த முருகமணி என்பவரின் வாரிசுதாரராக அவரது மகள் எஸ்தர் சுகிர்தா என்பவருக்கு விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
Similar News
News April 19, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரடியாக தெரிவித்து பயனடையலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 19, 2025
விருதுநகர்: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
News April 19, 2025
முழு வீச்சில் தயாராகும் பொருட்காட்சி திடல்

சிவகாசி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் ஒரு மாதம் பிரம்மாண்ட பொருட்காட்சி நடைபெற உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெற உள்ள பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பொருட்காட்சி திடல் முழு வீச்சில் தயாராகி வருகிறது.