News January 25, 2025
பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நேற்று (24.01.2025) நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, தேர்வானவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
Similar News
News December 5, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு… உஷார்!

வேலூர் அடுத்த காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மஸ்தான் (வயது 45) என்பவர் நேற்று (டிச.4) அவரின் செல்போனை திருடியதை பார்த்து கையும் களவுமாக பிடித்து ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
News December 5, 2025
பாச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

குடியாத்தம் அடுத்த சந்தன பேட்டை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35) இவர் இன்று (டிச.4) பாச்சல் அருகே ஆசிரியர் நகரில் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 5, 2025
திருப்பத்தூர்: விளையாட்டு வாக்கில் தின்னரை குடித்த குழந்தை!

ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்பியம்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் அபினாஷ் இவரது மகன் பிரனாப் (வயது 2 1/2) வயது குழந்தை நேற்று (டிச.4) தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்க வைத்து இருந்த தின்னர் குடித்து மயங்கி விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த பெற்றோர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


