News April 25, 2025
பணிக்கு சென்ற வன ஊழியர் உயிரிழப்பு

கூடலூர், ஓவேலி பகுதியில் வரையாடு கணக்கெடுப்பு பணிக்கு சென்ற வனக்காப்பாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஓவேலி வனச்சரகத்திற்கு சென்ற உட்பட்ட டெரஸ் பகுதியில் வனக்காப்பாளர் மணிகண்டன் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் முகாமிலேயே தங்கி உள்ளார். வன ஊழியர்கள் திரும்பி வந்து பார்த்த பொழுது இறந்த கிடப்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
நீலகிரி: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
கூடலூரில் காட்டு யானை! பயத்தில் மக்கள்

நீலகிரி, கூடலூர் நகருக்குள் வரும் நடுகூடலூர் பகுதியில், குடியிருப்புகளுக்கு மிக அருகில் நேற்று பகல் நேரத்தில் ஒரு காட்டு யானை முகாமிட்டிருப்பது பொதுமக்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பகல் நேரத்திலேயே யானை குடியிருப்பு பகுதிக்கு உலா வந்தது. அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 26, 2025
நீலகிரி: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.


