News April 5, 2025
பணம் இரட்டிப்பு மோசடி: போலீசார் எச்சரிக்கை!

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 15, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 15, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (15.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 15, 2025
சேலம் மாவட்டத்தின் அறிய படாத தகவல்கள்

சேலம் மாவட்டம் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1792 ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் ஆகும். இளம்பிள்ளை, இரும்பு ஆலை போன்ற பகுதிகளில் இரும்பு, ஜவுளி, வேளாண்மை வளங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேலம் தனி அங்கம் வகிக்கிறது. மேலும் தமிழகத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 3 முதல்வர்களை கொடுத்த ஊராகும். உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை COMMENT பண்ணுங்க!