News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News December 9, 2025
ராசிபுரம்: சிறுவனின் நெகிழ்ச்சி செயல்!

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே, வெள்ளை பிள்ளையார் கோவில் நெடுஞ்சாலையில் நடைபயணம் செய்துகொண்டிருந்த நடுப்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள், பாதையில் விழுந்திருந்த தங்க மோதிரத்தை பார்த்தனர். உடனே அதை தங்களிடம் வைத்துக் கொள்ளாமல், வெண்ணந்தூர் காவல் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் அவர்களிடம் ஒப்படைத்தனர். சிறுவர்களின் நேர்மையான செயலுக்கு காவல் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து, வாழ்த்துகளை வழங்கினர்.
News December 9, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதாரம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் டிச.20ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 63803-69124 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News December 9, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


