News March 27, 2025

பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

Similar News

News December 8, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று டிசம்பர்-8ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முட்டையின் தேவை அதிகரித்தது. இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக இதே விலை நீடித்து வருகிறது.

News December 8, 2025

பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டிஆர்ஓ!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவியினை வழங்கினார்.

News December 8, 2025

ராசிபுரம் அருகே நடந்த துயரம்!

image

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த தணிகை செல்வன் (20) கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடந்துசெல்லும் போது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ராசிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், தம்மம்பட்டியை சேர்ந்த சரத் (19) மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!