News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News November 23, 2025
நாமக்கல்லில் தக்காளி விலை உயர்வு!

பருவ மழை காரணமாக காய்கனி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி வரத்து மிக குறைவாக இருப்பதால், இதன் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.48க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (நவ.23) 12 ரூபாய் விலை உயர்ந்து ஒரு தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
News November 23, 2025
நாமக்கல்: ரூ.64,820 சம்பளத்தில் வங்கியில் வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI)
மொத்த பணியிடங்கள்: 115.
கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate.
சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
விண்ணப்பிக்க: இங்கே <
News November 23, 2025
நாமக்கல் மாவட்டத்தில் மொத்த மழையளவு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று நவம்பர்-23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: மங்களபுரம் 7.40 மிமீ, நாமக்கல் 11 மிமீ, பரமத்திவேலூர் 16 மிமீ, புதுச்சத்திரம் 5 மிமீ, ராசிபுரம் 10 மிமீ, சேந்தமங்கலம் 4.60 மிமீ, திருச்செங்கோடு 4 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 4 மிமீ, கொல்லிமலை 9 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 71 மிமீ மழை பதிவாகியுள்ளது.


