News March 27, 2025

பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

Similar News

News November 26, 2025

குமாரபாளையம் வருகை தந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

image

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக குமாரபாளையத்தில் மாநில திமுக கட்சி நிர்வாகியின் இல்லத்திற்கு இன்று மாலை வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 20 நிமிடங்கள் உறவினர் வீட்டில் இருந்த தமிழக முதல்வர் அதன் பின்னர் சித்தோட்டில் நடைபெறும் நிகழ்விற்கு சென்றார்.

News November 26, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர் 26ம் தேதி நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ6.10நிர்ணயம் செய்யப்பட்டது தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வு மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக இந்த விலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது

News November 26, 2025

கல்விக்கடன் முகாமில் கடன் உதவிகள் வழங்கல்!

image

பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில், பயனாளிகளுக்கு கடனுவிகளை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!