News March 29, 2025
பணத்திற்கு பதில் பேப்பர் கட்டு; ரூ.5 லட்சம் மோசடி…!

ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் டெய்லரிங் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள், ஆசை வார்த்தைகளைக் கூறி ராணிப்பேட்டைக்கு வரவைத்து வெளிநாட்டு பணம் கொடுப்பதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்து தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
Similar News
News December 12, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் அட்டையில் திருத்தமா? சூப்பர் வாய்ப்பு!

ராணிப்பேட்டை, பொது வினியோக திட்டம், மாததொரும் நடக்கிறது. அதன்படி நாளை டிச13 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அலுவலகங்களில் நடக்கவுள்ளது. இதில் ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் (ம) நீக்கல், மொபைல் எண் மாற்றம், புது ரேஷன் கார்டு போன்றவற்றை முகாமில் சரி செய்து மாற்றி தரப்படும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு அலுவலகத்தை அணுகலாம்.
News December 12, 2025
ராணிப்பேட்டை: ரூ.3.5 லட்சம் குட்கா பொருள்.. வசமாக சிக்கினார்!

ராணிப்பேட்டை, காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகள் அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் இருந்தனர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது 326கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவரை அதிரடியாக கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 53 ஆயிரம் ஆகும்.
News December 12, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச-11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


