News March 29, 2025
பணத்திற்கு பதில் பேப்பர் கட்டு; ரூ.5 லட்சம் மோசடி…!

ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் டெய்லரிங் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள், ஆசை வார்த்தைகளைக் கூறி ராணிப்பேட்டைக்கு வரவைத்து வெளிநாட்டு பணம் கொடுப்பதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்து தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
Similar News
News November 17, 2025
ராணிப்பேட்டை: சிலிண்டர் மானியம் வேண்டுமா?

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம்.(SHARE)
News November 17, 2025
ராணிப்பேட்டை: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

ராணிப்பேட்டை: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 17, 2025
ராணிப்பேட்டை: கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பு!

ராணிப்பேட்டை: நெமிலியில் நேற்று(நவ.16) நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ‘2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக கூட்டணி குறித்து வரும் டிசம்பரில் முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். பெண்கள் மீதான வன்முறை, போதைப் பிரச்சனை, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதில் பேசப்பட்டன.


