News April 20, 2025
பணக்கஷ்டத்தை தீர்க்கும் தங்க முனியப்பன்!

நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளியில் கோயில் கொண்டிருக்கிறார் தங்க முனியப்பன். இங்கு நோய்நொடிகள் நீங்கவும், கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் விலகிடவும் பக்தர்கள் வேண்டுதல் வைத்து வரம் பெறுகிறார்கள். அதேபோல், தங்க முனியப்பனை வேண்டிக்கொண்டால் நம்முடைய பணக் கஷ்டம், மனக் கஷ்டம் அனைத்தும் விரைவில் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதுபோன்ற பிரச்னைகளால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News November 23, 2025
நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 23, 2025
ராசிபுரத்தில் நடந்த கோர சம்பவம்!

ராசிபுரம்–அணைப்பாளையம் ரயில் பாதையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் நேற்று மாலை இருந்தது. முதலில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தார். சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஓட்டுநர் உரிமத்தின் மூலம் அவர் ராசிபுரம் வரதன் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (51) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 23, 2025
நாமக்கல்லில் லாரி திருட்டு – பெரம்பலூரை சேர்ந்தவர் கைது!

நாமக்கல்லில் செந்தில்குமார் தனக்கு சொந்தமான லாரியை கணேஷ் என்பவரின் பட்டறையில் பழுது நீக்க கடந்த 12ந் தேதி விட்டுள்ளார். இதனை அடுத்து லாரியை காணவில்லை என நல்லிபாளையம் காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் செந்தில்குமார் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் பெரம்பலூர் ஆலத்தூர் வரகுபாடியை சேர்ந்த முத்துகுமாரை கைது செய்து லாரியை மீட்டனர்.


