News May 3, 2024
பட்டாசு திரி பதுக்கியவர் கைது

விருதுநகர் அருகே ஓ. முத்தலாபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து பாண்டித்துரை என்பவரின் வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் அங்கு அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 குரோஸ் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்த ஆமத்தூர் போலீஸார் பாண்டிதுரையை கைது செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு எதிரான வழக்கு ரத்து

பால்வளத்துறையின் அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி போரட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் திமுக எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை இன்று ரத்து செய்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.
News December 11, 2025
BREAKING விருதுநகர் அமைச்சரின் வழக்கு ரத்து

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 2020-ம் ஆண்டில் விருதுநகரில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் தடையை மீறி போரட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
News December 11, 2025
விருதுநகர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <


