News April 29, 2025

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி ஸ்டான்டர்டு பட்டாசு ஆலையில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் 100% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி 58, என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

Similar News

News October 31, 2025

விருதுநகர்: பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்!

image

சிவகாசி அருகே ஆனையூரில் உள்ள தொழிலக பாதுகாப்பு அலுவலகத்தில், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேதிப்பொருள் கலவை, மருந்து செலுத்துதல் உள்ளிட்ட வெடிபொருள் பாதுகாப்பு விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு தொழிலாளர்களை அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு நவ. 10 முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News October 31, 2025

விருதுநகர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News October 31, 2025

விருதுநகர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

image

நாளை (நவ. 1) விருதுநகர் நகராட்சி முஸ்லீம் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநலம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ், முதல்-அமைச்சர் காப்பீடு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE

error: Content is protected !!