News August 14, 2024
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி அருகே, மாயத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று(ஆக.,14) காலை சுமார் 10 மணி அளவில் அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Similar News
News December 20, 2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

விசைத்தறிகள் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிவுகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்தவும், புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திடவும் மூலதன மானியங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் http://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
News December 20, 2025
விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04562-252723 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News December 20, 2025
விருதுநகர் கலெக்டர் கார் மறிப்பு

விருதுநகர், வத்திராயிருப்பு அருகே கீழக்கோட்டையூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர கோரி 7 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை கட்டித் தரப்படவில்லை. நேற்று முன்தினம் கலெக்டர் சுகபுத்ரா கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்திற்கு வந்த கலெக்டரின் காரை மறித்த கிராம மக்கள் 5பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


