News August 14, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி அருகே, மாயத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று(ஆக.,14) காலை சுமார் 10 மணி அளவில் அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Similar News

News January 8, 2026

விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

விருதுநகர் மக்களே இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 8, 2026

விருதுநகரில் பரபரப்பு….. எரிந்த நிலையில் உடல் மீட்பு

image

விருதுநகர் ஆத்துப் பாலம் அருகே நிறைவாழ்வு நகர் சர்ச் எதிரே நீர்வரத்து ஓடையில் நேற்று இரவு 7:00 மணிக்கு அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. பஜார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார் அவரது பெயர், விபரம் குறித்து விசாரிக்கின்றனர்.

News January 8, 2026

விருதுநகர்: இந்தியன் ஆயிலில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12, டிப்ளமோ, B.E படித்தவர்கள் ஜன.9க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!