News August 14, 2024
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி அருகே, மாயத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று(ஆக.,14) காலை சுமார் 10 மணி அளவில் அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Similar News
News January 10, 2026
விருதுநகர்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

விருதுநகர் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <
News January 10, 2026
விருதுநகர்: பேராசிரியை நகை மாயம்: மாணவரிடம் விசாரணை

திருச்சுழி அருகே வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியை நகைகள் மாயமான வழக்கில் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்கபுரம் வேளாண்மை கல்லூரியில் பணியாற்றும் மோகனப்பிரியா (34) தனது 8½ பவுன் தங்க நகைகளை கல்லூரி நூலகத்தில் காணாமல் போனது. சிசிடிவி ஆய்வில் மாணவர் ஹரிஹரன் (19) சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து ம. ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 10, 2026
சிவகாசி அருகே சாக்கு வியாபாரிக்கு நேர்ந்த சோகம்

சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜ் (58). இவர் பழைய சாக்கு வியாபாரம் செய்து வரும் இவர் விஸ்வநத்தம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த முத்துக்காளை(30) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் முத்துக்காளை மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்


