News October 23, 2024
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் நெல்லை வருகை

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா வருகிற 26 ஆம் தேதி சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பட்டம் அளிக்க உள்ளார். இதற்காக அவர் நெல்லைக்கு வருகை தர உள்ளார். விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
நெல்லை: 80 லட்சம் பண மோசடி!

நெல்லை, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மென் பொறியாளரிடம் இணையவழி முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கப்பட்டு, இரண்டு மாதங்களில் பணத்தை இழந்தார். முதலீட்டை திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டதால், அவர் திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
News December 2, 2025
நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் கோயிலில் கார்த்திகை மாத மூன்றாம் சோமவார தினத்தை முன்னிட்டு நேற்று தாமிர சபையில் வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
News December 2, 2025
எஸ் ஐ ஆர் புதிய கால அட்டவணை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கணக்கீட்டிற்கான நாள் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. விசாரணை சரிபார்ப்பு 16 முதல் ஜனவரி 15 வரை நடக்கிறது. இதற்கான பட்டியல் விவரத்தை நெல்லை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று வெளியிட்டுள்ளது.


