News October 23, 2024
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் நெல்லை வருகை

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா வருகிற 26 ஆம் தேதி சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பட்டம் அளிக்க உள்ளார். இதற்காக அவர் நெல்லைக்கு வருகை தர உள்ளார். விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
நெல்லை: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <
News December 2, 2025
நெல்லை: உச்சம் தொட்ட முருங்கைகாய் விலை

தொடர் மழையின் காரணமாக நெல்லையில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. மழையின் காரணமாகவும் முருங்கைக்காயின் வரத்து குறைவு காரணமாகவும் முருங்கைக்காயின் விலை உச்சம் அடைந்துள்ளது. நெல்லை உழவர் சந்தைகளில் கிலோ 310 ரூபாய்க்கு விற்பனையாகிறது வெளிச்சந்தைகளில் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முருங்கைக்காயின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.
News December 2, 2025
நெல்லை: அரசு பஸ் மோதி பெண் உயிரிழப்பு

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 47). இவரது மனைவி சந்திரா (42). இவர்கள் மீனாட்சிபுரத்தில் டிபன் சென்டர் நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகல் சமாதானபுரம் பகுதியில் மொபட்டில் சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் சந்திரா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுப்பையா லேசான காயத்துடன் தப்பினார். விபத்துக்குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


